Friday, January 28, 2011

சாருவின் பதில் கடிதம்


புத்தக் வெளியீட்டு விழா – ௩௨

http://charuonline.com/blog/?p=1748

டியர் இம்ரான்,

இதைப் போலவே பல நண்பர்கள் எழுதியுள்ளனர். இருந்தாலும் என் மனதுக்கு எது சரி என்று படுகிறதோ அதைத்தானே நான் செய்தாக வேண்டும்? எனக்கு தினமும் எத்தனையோ ஆபாசக் கடிதங்கள் வருகின்றன. ராத்திரி ரவுண்ட் அப் என்ற மஞ்சள் பத்திரிகையில் என்னைப் பற்றி எப்படி எப்படி எல்லாமோ எழுதியிருந்தார்கள். கோபம் வரவில்லை. ஆனால் ஒரு நண்பன் அப்படிச் சொல்லலாமா என்பதே என் கேள்வி. என் நாவலை யாரோ ஒருவர் சரோஜாதேவி புத்தகம் என்று சொல்லலாம். நண்பனாகப் பழகியவர் சொல்லக் கூடாது. சொன்னால் அது பற்றி 200 பக்கம் பதில் எழுதுவேன். இது ஒரு ராந்தவூ (rendesvouz); அவ்வளவுதான்.

சொல்வதற்கு இன்னும் இருக்கிறது… பொறுத்துக் கொள்ளவும். நீங்கள் கேட்டுள்ள மற்ற கேள்விகள்/சந்தேகங்களை தொடரின் போக்கிலேயே பார்ப்போம்.

சுஜாதாவுக்குப் பிறகு என்று சொல்லியிருக்கிறீர்கள். இப்போதுதான் மனுஷ்ய புத்திரன் எழுதியதைப் படித்துப் பார்த்தேன். என் வாசகர்களை நினைத்தால் அவருக்கு ஒஸாமா பின் லாடனின் தற்கொலைப் படை ஞாபகம் வருகிறதாம். இன்னும் விரிவாக எழுதியிருக்கிறார். உயிர்மையில் படித்துப் பாருங்கள்.

தங்கள் அன்புக்கு நன்றி.

சாரு

http://charuonline.com/blog/?p=1748

Monday, January 17, 2011

சாரு நிவேதிதாவுக்கு ஒரு கடிதம்..

சாரு, இந்த வார்த்தையின் பின்னால் நான் கண்ணை மூடிக் கொண்டு போகிறேன். எங்கே, என்ன கிடைக்கும் என்று தேடி தேடி படிக்கிறேன். சுஜாதாவிற்கு பிறகு என்னுள் இருந்த வெற்றிடத்தை போக்கிய வார்த்தை இந்த சாரு.

யார் இந்த மிஸ்கின், இரு படங்களை இயக்கியவர், ஒரு தேர்ந்த சினிமா வியாபாரி. அனால் சாரு நீங்கள் யார், ஒரு தேர்ந்த படைப்பாளி,அற்புதமான இலக்கியவாதி. உங்களை போல் ஒருவர் இவ்வளவு கீழ் இறங்கி வசை பாட வேண்டுமா? மிஸ்கின் மேல் நீங்கள் சுமத்தும் குற்றங்களில் என்னில் நெருடுவது இரண்டு...

1. மிஸ்கின் சிறுவர்,சிறுமியர் கலந்து கொண்ட விழாவில் ஆபாசமாக பேசிவிட்டார் ? ( உங்கள் பாசையில் மெண்டல் ரேப் )


ஒரு விழா என்றால் அதில் நிறைய சாதக பாதக விஷயங்கள் பேசப்படலாம். நாம் விழாவிற்கு அழைக்கும் அனைவரும் நாம் விரும்பும் வண்ணம் பேசுவார்கள் என்று சொல்ல முடியாது.
அதே போல் தான், இந்த மிஸ்கின் விசயத்திலும் நடந்தது , நீங்கள் மிச்கின்னை நண்பன் என்றிர்கள், இன்னும் வேறெல்லாம் சொன்னீர்கள் , ஒரு படி மேலே போய் உங்கள் வாரிசு என்று மட்டும் அறிவிக்கவில்லை.அனால் சாரு அது உங்கள் விருப்பம். அதே சமயம் உங்கள் வாசகன் என்ற முறையில் எனக்கு புலப்பட்ட ஒன்று, உங்கள் இருவருக்கும் என்றுமே ஒரே அலைவரிசை இருந்ததில்லை அது இருக்கவும் முடியாது என்பது என் தாழ்மையான கருத்து.

2. இந்த பிரச்சினை தொடங்கும் முன் இதே மிச்கினை கொண்டாடியது ஏன்? (நான் அனந்த விகடன் வாங்கி முதலில் தவறாமல் படிப்பது உங்களைதான் , கண்ணின் கதை ஆகட்டும், நந்தலாலா ஆகட்டும்.. எவ்வளவு முரண்பாடு )

கண்ணின் கதை, இந்த புத்தகத்தை மிஸ்கின் கொடுத்த கதையை மிகவும் சிலாகித்து விகடனில் எழுதி இருந்திர்கள், அனால் அப்பொழுதே நீங்கள் எழுத மறந்தது, அதே புத்தகத்தை நீங்கள் பல வருடம் முன்பே மொழி மாற்றம் செய்ததை. நீங்கள் நினைத்து இருந்தால் அப்பொழுதே மிஸ்கினின் முகத்திரையை கிழித்து இருக்கலாம். அனால் அப்படியும் செய்ய வில்லை. சாரு இது உங்கள் மேன்மையான குணத்தை காட்டுகிறது.

அதே சாரு இப்பொழுது , ஒரு சண்டை என்று வந்த உடன் இதை எல்லாம் போட்டு உடைப்பது என்ன நியாயம் சாரு?அது உங்களை நீங்களே சிறுமை படுத்துதல் ஆகாதா சாரு ?

ஒரு வாசகனின் வேண்டுகோள் என்று நினைத்தாலும் சரி இல்லை ஒரு நண்பனின் அக்கறை என்று நினைத்தாலும் சரி....

சாரு, நீங்கள் உக்கிரம் காட்டக் காட்ட இந்த கேடு கெட்ட சினிமா மக்கள் அதில் குளிர் காய்வார்களே தவிர உணர மாட்டார்கள். போதும் சாரு நீங்கள் "வஷிஸ்டர்" உங்கள் வார்த்தைகளை உங்கள் வாசகர்களாகிய எங்களுக்கு மட்டும் பயன்படுத்துங்கள். அதை நாங்கள் போற்றி பாதுகாப்போம்.


Monday, January 10, 2011

ராசாக்களும் கோமாளிகளும் .......

இந்த புத்தாண்டு முதல் குடிக்க மாட்டேன் என
சபதமிட சொன்னால் மனைவி
நானும் சரி என்றேன்.
ஆட்டம் முடிந்து வீடு திரும்பி
துயில் ஏழுந்து மூத்திரம் கழித்துவிட்டு வந்தவனின்
சட்டையை பிடித்து?
உன் மூத்திரத்தில் 5000 'தின் நெடி வருகிறது என்று கேட்டாள்...
அதிர்ந்தேன் !!
என்ன வென்று சொல்ல இந்த மனைவிமார்களின் மோப்ப சக்தியை..


ஒரு ஆர்வத்தில் நண்பனிடம் சொன்னேன்..
நீரா ராடியவை பார்க்கவேண்டும் யென்று.
சிபிஐ துரத்தும் பரவால்லையா ? என்றான்
அமைதிஆகிவிடேன்....

நண்பன் சொன்னான்..
மாப்பள நம்மக்கு சிங்கள் டீகே வக்கில்லே
இவிங்க எப்படி கோடிகள அடிகிராணுவ யென்று..
நம்புங்கள் சொன்னவன் பெயர் ஆ.ராசா (நீங்கள் நினைப்பது அல்ல
)


நித்தியானந்த சாமியை சந்திக்க போகும் முன் கடை பிடிக்க வேண்டியவை.....
1.கேமரா கண்டிப்பாக அனுமதியில்லை(அதை அவர் ஆட்களே பர்துகொள்வர்கள்) .
2. கால் தடுக்கி சாமியார் மேல் விழுந்தாலும் கமெராவில் பதிவாகலாம் ஜாக்கிரதை (ரஞ்சிதாவுக்கு இப்படி தான் நடந்ததாம்).
3. பாதாம், பிஸ்தா,சிட்டு குருவி லேகியம் போன்ற லாகிரி வஸ்துகளை அறவே தவிர்க்க வேண்டும்.(அது சாமிக்கும் , ரஞ்சிக்கு மட்டும்)
4. தலை மயிருக்கு கண்டிப்பா சாயம் பூச கூடாது.(ரஞ்சி கோபித்து கொள்வார்)
கடைசியாக - சாமிக்கு "சவுதி அரேபியாவில் " வேலை வாங்கி கொடுப்பவருக்கு அனுமதி இலவசம் ( ஹி ஹி ஹி ஹி )

புதிய சாதிகள்
உண்டெனில்
இவ்வாறு வரையறுக்கலாம்,
வாய்ப்பு கிடைக்காதவன் - விமர்சகன்
வாய்ப்பு கிடைத்தவன் - சந்தர்பவாதி
மூன்றாம் சாதி
கண் திறந்து வாய் பிளந்து
கை தட்டி ஏமாறும் சாதி
தமிழன் சாதி - கோமாளி சாதி




Sunday, January 9, 2011

மன்மதன் அம்பு பார்த்து ஏனக்கு தோன்றியதில் சில வரிகள் இங்கே...

1. இன்னுமா கமல் கதை எழுதுவதை முயற்சி செய்ய வேண்டும்?
2. ரவிகுமாரை துறந்து ஏன் புதிய இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க கூடாது?
3. சந்தேகமே இல்லாமல் படம் குப்பை, என்று உணரும் திறன் கமல்லுகு குறைத்துவிட்டதா?
4. நாடகம் பார்க்க தொலைத்த சமகால தமிழனுக்கு, ஒரு மோசமான நாடகம் பார்க்க கொடுத்தாரா கமல் ?


பணத்தை தொலைத்து,நேரம் வீணடித்து, ஒரு குப்பை தொட்டியை கடக்கவைத்த கமலுக்கு ஒரு உன்னைமையான ரசிகனின் நன்றிகள்..

Saturday, October 10, 2009

என் முதல் முகவரி ... www.askmewhy.com

இன்று இரவு சுமார் 12:48 மணிக்கு ஒரு திடீர் சிந்தனை. ஒரு வலை பதிவு இணைய தளத்தை தொடங்கலாமே என்று...பல்வேறு சிந்தனைகளுடன் நான் கவிழிந்து கிடந்தேன்.
வழக்கம் போல் தூக்கம் இல்லை.
தொ.க பெட்டியில் ஆங்கில திரைப்படம் ஓடி கொண்டு இருந்தது, அதிலும் மனம் லைக்கவில்லை. மனதில் ஆயிரம் கேள்விகள்??? அத்தனையும் விடை அறிய கேள்விகள்..

என்னால் முடியுமா?
எப்படி முடியும்?
எங்கு தொடங்குவது?
பணம் ?

இப்படியாக பல கேள்விகள்...யோசித்தவாறே ...

இறுதியில் ஒரு பேரும் வைத்துவிட்டேன்...

www.askmewhy.com..... பார்க்கலாம் எங்கே போய் முடியும் என்று?

Saturday, June 21, 2008

நான் அவள் காதல்...

உன்னை எனக்காக தரும்பொழுது..
நான் உனக்காக என் உயிரை தர மாட்டேனா??

நம் காதல்!! இந்த பிரபஞ்சத்தில் முதல் காதல் இல்லைதான்...
அவர்களும் காதலித்தார்கள்..
அவைகளும் காதலித்தன..
நாமும் காதலித்தோம்..
மிகச் சாதாரனமாய்..
நான் மஜ்னு அல்ல எனை நானே கொல்ல..
ஒற்றை வரியில்..நான் காவிய காதலனும் இல்லை..

ஆனால் பெண்ணே....

நீ உன்னை எனக்காக தரும்பொழுது..
நான் உனக்காக என் உயிரை தர மாட்டேனா??

Thursday, June 19, 2008

ஏன் தூக்கம் இல்லை..

ஏன் தூக்கம் இல்லை..இன்று இரவும் இப்படியே கழிந்து விடுமா ...புரண்டு புரண்டு படுத்தும் பார்த்து விட்டேன் ஏதோ ஒன்று தூக்கத்தை தடுத்து கொண்டே இருந்தது....

அட என்னடா இது பெரிய எழவா போச்சுதே என்று எழுந்து வெற்று உடம்போடு வெளியே வந்தேன்....நேரம் பார்க்கவில்லை....சரி இப்படியே நடக்கலாம் என்று நடக்க தொடங்கினேன்..இங்கொன்றும்..அங்கொன்றுமாய்...மக்கள் நடைபாதையில் ஆண் பெண் பேதமின்றி உறங்கி கொண்டிருந்தார்கள்.

இவர்கள் இங்கேயே உண்டு உறங்கி உறவும் கொண்டு...பிள்ளை பெத்தெடுத்து வாழ்ந்து மரணித்தும் போய்.....என்ன வழக்கை இது....இவர்களுக்கென்று குறிக்கோள் எனபது இல்லையா..

சரி நம் விஷயத்துக்கு வருவோம்...

அவளோடு எனக்கு பழக்கம் இருந்தது என்று அவன் வந்து சொன்ன உடனேயே நான் சுதாரித்து கொண்டு இருக்க வேண்டும்....சற்றே சபலத்தில் அசந்துவிட்டேன்..அவன் எனக்கு ரொம்ப நாள் பழக்கமில்லை,மூன்று நாட்கள் முன்பு அவர் வந்து இவனை தன் ஊர்க்காரன், உன்னுடன் இவனை சில நாட்கள் தங்க வைக்க முடியுமா என்றே கேட்டார்...அன்றும நான் பதில் சொல்லும் முன்பே அவர் இவன் பெட்டியை தூக்கி கொண்டு உள்ளே வந்து விட்டார்.. சரி என்று இவனை விட்டதில் தன் இப்பொழுது பிரச்சினையே...

படுபாவி...இவன் ஊரில் செய்த காதல்களை எல்லாம் சொல்லவதற்கு நானா கிடைத்தேன்..மூச்சு விடாமல் "ஓவ்வொன்றையும்" சொல்லி முடித்த நேற்று மாலையில் இருந்து எனக்கு தூக்கம் அம்பேல்...

இவன் சொல்லி முடித்த சற்று நேரத்தில் என் கைபேசி அலறியது...வேறு யார் என் வீட்டில் உள்ளவர்கள் தான்...எடுத்து பேசினேன்"டேய்...உனக்கு பெண் பார்த்து முடிவாகி விட்டது...சொல்லும் பொழுது வந்து ஒழுங்க தாலிய கட்டு புரிஞ்சதா...என்று மாமா அலறினார்..மேலும் அவரே தொடர்ந்தார்..பெண்ணின் பெயர்,ஊர்........ சொல்லும் போதே எனக்கு தலை சுற்றியது ...எதிரே அவன் என்ன "பங்காளி" வீட்லே விசேசம் போல..அப்பாவியாய் உரிமையுடன் கேட்டான் ...