Friday, January 28, 2011

சாருவின் பதில் கடிதம்


புத்தக் வெளியீட்டு விழா – ௩௨

http://charuonline.com/blog/?p=1748

டியர் இம்ரான்,

இதைப் போலவே பல நண்பர்கள் எழுதியுள்ளனர். இருந்தாலும் என் மனதுக்கு எது சரி என்று படுகிறதோ அதைத்தானே நான் செய்தாக வேண்டும்? எனக்கு தினமும் எத்தனையோ ஆபாசக் கடிதங்கள் வருகின்றன. ராத்திரி ரவுண்ட் அப் என்ற மஞ்சள் பத்திரிகையில் என்னைப் பற்றி எப்படி எப்படி எல்லாமோ எழுதியிருந்தார்கள். கோபம் வரவில்லை. ஆனால் ஒரு நண்பன் அப்படிச் சொல்லலாமா என்பதே என் கேள்வி. என் நாவலை யாரோ ஒருவர் சரோஜாதேவி புத்தகம் என்று சொல்லலாம். நண்பனாகப் பழகியவர் சொல்லக் கூடாது. சொன்னால் அது பற்றி 200 பக்கம் பதில் எழுதுவேன். இது ஒரு ராந்தவூ (rendesvouz); அவ்வளவுதான்.

சொல்வதற்கு இன்னும் இருக்கிறது… பொறுத்துக் கொள்ளவும். நீங்கள் கேட்டுள்ள மற்ற கேள்விகள்/சந்தேகங்களை தொடரின் போக்கிலேயே பார்ப்போம்.

சுஜாதாவுக்குப் பிறகு என்று சொல்லியிருக்கிறீர்கள். இப்போதுதான் மனுஷ்ய புத்திரன் எழுதியதைப் படித்துப் பார்த்தேன். என் வாசகர்களை நினைத்தால் அவருக்கு ஒஸாமா பின் லாடனின் தற்கொலைப் படை ஞாபகம் வருகிறதாம். இன்னும் விரிவாக எழுதியிருக்கிறார். உயிர்மையில் படித்துப் பாருங்கள்.

தங்கள் அன்புக்கு நன்றி.

சாரு

http://charuonline.com/blog/?p=1748

Monday, January 17, 2011

சாரு நிவேதிதாவுக்கு ஒரு கடிதம்..

சாரு, இந்த வார்த்தையின் பின்னால் நான் கண்ணை மூடிக் கொண்டு போகிறேன். எங்கே, என்ன கிடைக்கும் என்று தேடி தேடி படிக்கிறேன். சுஜாதாவிற்கு பிறகு என்னுள் இருந்த வெற்றிடத்தை போக்கிய வார்த்தை இந்த சாரு.

யார் இந்த மிஸ்கின், இரு படங்களை இயக்கியவர், ஒரு தேர்ந்த சினிமா வியாபாரி. அனால் சாரு நீங்கள் யார், ஒரு தேர்ந்த படைப்பாளி,அற்புதமான இலக்கியவாதி. உங்களை போல் ஒருவர் இவ்வளவு கீழ் இறங்கி வசை பாட வேண்டுமா? மிஸ்கின் மேல் நீங்கள் சுமத்தும் குற்றங்களில் என்னில் நெருடுவது இரண்டு...

1. மிஸ்கின் சிறுவர்,சிறுமியர் கலந்து கொண்ட விழாவில் ஆபாசமாக பேசிவிட்டார் ? ( உங்கள் பாசையில் மெண்டல் ரேப் )


ஒரு விழா என்றால் அதில் நிறைய சாதக பாதக விஷயங்கள் பேசப்படலாம். நாம் விழாவிற்கு அழைக்கும் அனைவரும் நாம் விரும்பும் வண்ணம் பேசுவார்கள் என்று சொல்ல முடியாது.
அதே போல் தான், இந்த மிஸ்கின் விசயத்திலும் நடந்தது , நீங்கள் மிச்கின்னை நண்பன் என்றிர்கள், இன்னும் வேறெல்லாம் சொன்னீர்கள் , ஒரு படி மேலே போய் உங்கள் வாரிசு என்று மட்டும் அறிவிக்கவில்லை.அனால் சாரு அது உங்கள் விருப்பம். அதே சமயம் உங்கள் வாசகன் என்ற முறையில் எனக்கு புலப்பட்ட ஒன்று, உங்கள் இருவருக்கும் என்றுமே ஒரே அலைவரிசை இருந்ததில்லை அது இருக்கவும் முடியாது என்பது என் தாழ்மையான கருத்து.

2. இந்த பிரச்சினை தொடங்கும் முன் இதே மிச்கினை கொண்டாடியது ஏன்? (நான் அனந்த விகடன் வாங்கி முதலில் தவறாமல் படிப்பது உங்களைதான் , கண்ணின் கதை ஆகட்டும், நந்தலாலா ஆகட்டும்.. எவ்வளவு முரண்பாடு )

கண்ணின் கதை, இந்த புத்தகத்தை மிஸ்கின் கொடுத்த கதையை மிகவும் சிலாகித்து விகடனில் எழுதி இருந்திர்கள், அனால் அப்பொழுதே நீங்கள் எழுத மறந்தது, அதே புத்தகத்தை நீங்கள் பல வருடம் முன்பே மொழி மாற்றம் செய்ததை. நீங்கள் நினைத்து இருந்தால் அப்பொழுதே மிஸ்கினின் முகத்திரையை கிழித்து இருக்கலாம். அனால் அப்படியும் செய்ய வில்லை. சாரு இது உங்கள் மேன்மையான குணத்தை காட்டுகிறது.

அதே சாரு இப்பொழுது , ஒரு சண்டை என்று வந்த உடன் இதை எல்லாம் போட்டு உடைப்பது என்ன நியாயம் சாரு?அது உங்களை நீங்களே சிறுமை படுத்துதல் ஆகாதா சாரு ?

ஒரு வாசகனின் வேண்டுகோள் என்று நினைத்தாலும் சரி இல்லை ஒரு நண்பனின் அக்கறை என்று நினைத்தாலும் சரி....

சாரு, நீங்கள் உக்கிரம் காட்டக் காட்ட இந்த கேடு கெட்ட சினிமா மக்கள் அதில் குளிர் காய்வார்களே தவிர உணர மாட்டார்கள். போதும் சாரு நீங்கள் "வஷிஸ்டர்" உங்கள் வார்த்தைகளை உங்கள் வாசகர்களாகிய எங்களுக்கு மட்டும் பயன்படுத்துங்கள். அதை நாங்கள் போற்றி பாதுகாப்போம்.


Monday, January 10, 2011

ராசாக்களும் கோமாளிகளும் .......

இந்த புத்தாண்டு முதல் குடிக்க மாட்டேன் என
சபதமிட சொன்னால் மனைவி
நானும் சரி என்றேன்.
ஆட்டம் முடிந்து வீடு திரும்பி
துயில் ஏழுந்து மூத்திரம் கழித்துவிட்டு வந்தவனின்
சட்டையை பிடித்து?
உன் மூத்திரத்தில் 5000 'தின் நெடி வருகிறது என்று கேட்டாள்...
அதிர்ந்தேன் !!
என்ன வென்று சொல்ல இந்த மனைவிமார்களின் மோப்ப சக்தியை..


ஒரு ஆர்வத்தில் நண்பனிடம் சொன்னேன்..
நீரா ராடியவை பார்க்கவேண்டும் யென்று.
சிபிஐ துரத்தும் பரவால்லையா ? என்றான்
அமைதிஆகிவிடேன்....

நண்பன் சொன்னான்..
மாப்பள நம்மக்கு சிங்கள் டீகே வக்கில்லே
இவிங்க எப்படி கோடிகள அடிகிராணுவ யென்று..
நம்புங்கள் சொன்னவன் பெயர் ஆ.ராசா (நீங்கள் நினைப்பது அல்ல
)


நித்தியானந்த சாமியை சந்திக்க போகும் முன் கடை பிடிக்க வேண்டியவை.....
1.கேமரா கண்டிப்பாக அனுமதியில்லை(அதை அவர் ஆட்களே பர்துகொள்வர்கள்) .
2. கால் தடுக்கி சாமியார் மேல் விழுந்தாலும் கமெராவில் பதிவாகலாம் ஜாக்கிரதை (ரஞ்சிதாவுக்கு இப்படி தான் நடந்ததாம்).
3. பாதாம், பிஸ்தா,சிட்டு குருவி லேகியம் போன்ற லாகிரி வஸ்துகளை அறவே தவிர்க்க வேண்டும்.(அது சாமிக்கும் , ரஞ்சிக்கு மட்டும்)
4. தலை மயிருக்கு கண்டிப்பா சாயம் பூச கூடாது.(ரஞ்சி கோபித்து கொள்வார்)
கடைசியாக - சாமிக்கு "சவுதி அரேபியாவில் " வேலை வாங்கி கொடுப்பவருக்கு அனுமதி இலவசம் ( ஹி ஹி ஹி ஹி )

புதிய சாதிகள்
உண்டெனில்
இவ்வாறு வரையறுக்கலாம்,
வாய்ப்பு கிடைக்காதவன் - விமர்சகன்
வாய்ப்பு கிடைத்தவன் - சந்தர்பவாதி
மூன்றாம் சாதி
கண் திறந்து வாய் பிளந்து
கை தட்டி ஏமாறும் சாதி
தமிழன் சாதி - கோமாளி சாதி




Sunday, January 9, 2011

மன்மதன் அம்பு பார்த்து ஏனக்கு தோன்றியதில் சில வரிகள் இங்கே...

1. இன்னுமா கமல் கதை எழுதுவதை முயற்சி செய்ய வேண்டும்?
2. ரவிகுமாரை துறந்து ஏன் புதிய இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க கூடாது?
3. சந்தேகமே இல்லாமல் படம் குப்பை, என்று உணரும் திறன் கமல்லுகு குறைத்துவிட்டதா?
4. நாடகம் பார்க்க தொலைத்த சமகால தமிழனுக்கு, ஒரு மோசமான நாடகம் பார்க்க கொடுத்தாரா கமல் ?


பணத்தை தொலைத்து,நேரம் வீணடித்து, ஒரு குப்பை தொட்டியை கடக்கவைத்த கமலுக்கு ஒரு உன்னைமையான ரசிகனின் நன்றிகள்..