Saturday, June 21, 2008

நான் அவள் காதல்...

உன்னை எனக்காக தரும்பொழுது..
நான் உனக்காக என் உயிரை தர மாட்டேனா??

நம் காதல்!! இந்த பிரபஞ்சத்தில் முதல் காதல் இல்லைதான்...
அவர்களும் காதலித்தார்கள்..
அவைகளும் காதலித்தன..
நாமும் காதலித்தோம்..
மிகச் சாதாரனமாய்..
நான் மஜ்னு அல்ல எனை நானே கொல்ல..
ஒற்றை வரியில்..நான் காவிய காதலனும் இல்லை..

ஆனால் பெண்ணே....

நீ உன்னை எனக்காக தரும்பொழுது..
நான் உனக்காக என் உயிரை தர மாட்டேனா??

Thursday, June 19, 2008

ஏன் தூக்கம் இல்லை..

ஏன் தூக்கம் இல்லை..இன்று இரவும் இப்படியே கழிந்து விடுமா ...புரண்டு புரண்டு படுத்தும் பார்த்து விட்டேன் ஏதோ ஒன்று தூக்கத்தை தடுத்து கொண்டே இருந்தது....

அட என்னடா இது பெரிய எழவா போச்சுதே என்று எழுந்து வெற்று உடம்போடு வெளியே வந்தேன்....நேரம் பார்க்கவில்லை....சரி இப்படியே நடக்கலாம் என்று நடக்க தொடங்கினேன்..இங்கொன்றும்..அங்கொன்றுமாய்...மக்கள் நடைபாதையில் ஆண் பெண் பேதமின்றி உறங்கி கொண்டிருந்தார்கள்.

இவர்கள் இங்கேயே உண்டு உறங்கி உறவும் கொண்டு...பிள்ளை பெத்தெடுத்து வாழ்ந்து மரணித்தும் போய்.....என்ன வழக்கை இது....இவர்களுக்கென்று குறிக்கோள் எனபது இல்லையா..

சரி நம் விஷயத்துக்கு வருவோம்...

அவளோடு எனக்கு பழக்கம் இருந்தது என்று அவன் வந்து சொன்ன உடனேயே நான் சுதாரித்து கொண்டு இருக்க வேண்டும்....சற்றே சபலத்தில் அசந்துவிட்டேன்..அவன் எனக்கு ரொம்ப நாள் பழக்கமில்லை,மூன்று நாட்கள் முன்பு அவர் வந்து இவனை தன் ஊர்க்காரன், உன்னுடன் இவனை சில நாட்கள் தங்க வைக்க முடியுமா என்றே கேட்டார்...அன்றும நான் பதில் சொல்லும் முன்பே அவர் இவன் பெட்டியை தூக்கி கொண்டு உள்ளே வந்து விட்டார்.. சரி என்று இவனை விட்டதில் தன் இப்பொழுது பிரச்சினையே...

படுபாவி...இவன் ஊரில் செய்த காதல்களை எல்லாம் சொல்லவதற்கு நானா கிடைத்தேன்..மூச்சு விடாமல் "ஓவ்வொன்றையும்" சொல்லி முடித்த நேற்று மாலையில் இருந்து எனக்கு தூக்கம் அம்பேல்...

இவன் சொல்லி முடித்த சற்று நேரத்தில் என் கைபேசி அலறியது...வேறு யார் என் வீட்டில் உள்ளவர்கள் தான்...எடுத்து பேசினேன்"டேய்...உனக்கு பெண் பார்த்து முடிவாகி விட்டது...சொல்லும் பொழுது வந்து ஒழுங்க தாலிய கட்டு புரிஞ்சதா...என்று மாமா அலறினார்..மேலும் அவரே தொடர்ந்தார்..பெண்ணின் பெயர்,ஊர்........ சொல்லும் போதே எனக்கு தலை சுற்றியது ...எதிரே அவன் என்ன "பங்காளி" வீட்லே விசேசம் போல..அப்பாவியாய் உரிமையுடன் கேட்டான் ...





எங்கே தொலைவேன்.....

கலங்குகின்றேன்....
கேள்விகள்,பதில்கள்,எண்ணங்கள்...
வந்து மறையும் முன்பே.
வந்த திசையை பார்க்கிறேன்...எத்தனை...எத்தனை...
காயங்கள்
நஷ்டங்கள்
துயரங்கள்
இன்பங்கள்
பார்த்தவரை போதும் என்று....
திரும்புகையில்...
மீண்டும் ஒரு முறை பார்த்து சிரிக்கிறதுவாழ்க்கை....
நம்பிக்கையுடன்.................
..................இம்ரான்